Monday, January 25, 2010

மழை

ஜில்லென்ற மழையில்
ஜன்னலோரம் நிற்கையில்
சொட்டு சொட்டாக
விழுந்த தண்ணீர்
சிந்திய கண்ணீரை
ஞாபகப்படுத்த
ஓர விழி பார்வையில்
ஓய்வின்றி தேடினேன்
உன்னை...

விழியினில் தோன்றிட
விருப்பம் இல்லை போலும்
மறைந்து சென்ற
உன் பிம்பம்
மறுக்காமல் சொல்லிட
ஈரமாகிப்போனது
கண்களும் ...

நிழல் அது மறைந்தாலும்
உன் நினைவது
நிற்காத மழையாய்
விழியிலும்
வாழ்வின் வழியிலும் !!!

காதல்

தேடிப் பார்கிறேன்
எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு
உனக்குள் இருக்கும் என்னை
தேடலிலும் நீதான்
கண்ணடித்து நிற்கிறாய்
தேடி தேடி தேய்ந்து
போகிறது காதல் உன்
தேகம் காணமல் !!!!

ஏக்கங்களுடன் உன்னுயிர் !!!

நீ பேசாமலே விட்டுப்போன
வார்த்தைகளை தேடி எடுத்து
முடிக்கையில் விடிந்தே விடுகிறது
இனி எப்படி உறங்க...
ஒவ்வொரு விடியலும்
எழுதப்படாத கவிதையாய்
என் முன்னே...

வர்ணித்திடாத வார்த்தைகளாய்
வாசித்திடாத புத்தகமாய்
கனவில் மட்டுமே
வந்து செல்லும்
என் உயிரே!!!!
நிஜத்தில் என்று உன்
முகம் காண்பேன்...
ஏக்கங்களுடன் உன்னுயிர் !!!!

Thursday, January 21, 2010

நீயென்று அறிந்தும்

ஆழ்ந்த உறக்கத்தில்
அழகாய் சிரித்தது
அலைபேசி
எடுக்க முயன்றேன்
விடாமல் கட்டியணைத்தது
உன் நினைவுகள் ...

என்னை தழுவிய அதனை
விட மனமில்லாமல்
அதனுடனே பயணித்தேன்
விடியும்வரை...
அழைப்பது நீயென்று
அறிந்தும்

அலைபேசி !!!

கண்கள் இரண்டும்
சந்திக்காமல் போனாலும்
செவிகள் இரண்டும்
சந்தித்திடும் எனக்காய்
நீ தந்த அலைபேசி
வழியாய் !!!

கண்ணில் தோன்றி
இதயத்தில் முடிந்த காதல்
எத்தனையோ
உதட்டில் தோன்றி
செவியில் சேர்ந்த
காதல் ஒன்றே !!!!

அலைபேசி வழிவந்த
அழகு முத்தங்கள்
அலையாய் என் உள்ளத்தில்
அசைந்தாடின
சொல்லில் அடங்கா
உன் எண்ணங்கள் உலகை
கிறங்கடித்தன ..

மிதக்கிறேன் உன்
அன்பில்
மீளும் வழித்தெரியாமல் ....

Wednesday, January 20, 2010

முடிவு பெறாத அன்பு..

முடிவு பெறாத அன்பு...

என்னை ஈன்றடுத்த
அன்னையே !!
என்ன தவம் புரிந்தேனோ
உன் மடியினில்
தவழ்ந்திட !!

நாளும் ஒரு அலங்காரமாய்
நாள்தொறும் உன்
அணைப்பில் !!
நாட்கள் கடப்பதும்
தெரியவில்லை
நான் வளர்வதும்
அறியவில்லை !!

ஆசையாய் நீ தந்த
முத்தங்கள் தேகம்
எங்கும் இனிக்கிறது
நீ எனக்கு அளித்த
பட்ட பெயர்களுக்கு
முன்னாள் நான்
வாங்கிய பட்டங்கள்
காணமல்போனதே !!

முடிவு பெறாத
உன் அன்பினில்
முடிக்க முடியாத
என் கவிதை
தாயே !! ..