Monday, January 25, 2010

மழை

ஜில்லென்ற மழையில்
ஜன்னலோரம் நிற்கையில்
சொட்டு சொட்டாக
விழுந்த தண்ணீர்
சிந்திய கண்ணீரை
ஞாபகப்படுத்த
ஓர விழி பார்வையில்
ஓய்வின்றி தேடினேன்
உன்னை...

விழியினில் தோன்றிட
விருப்பம் இல்லை போலும்
மறைந்து சென்ற
உன் பிம்பம்
மறுக்காமல் சொல்லிட
ஈரமாகிப்போனது
கண்களும் ...

நிழல் அது மறைந்தாலும்
உன் நினைவது
நிற்காத மழையாய்
விழியிலும்
வாழ்வின் வழியிலும் !!!

No comments:

Post a Comment