நேற்றுதான் பழகியது
போன்ற நினைவு
அதற்குள் பல ஆண்டுகள்
உருண்டோடி போனது
எத்தனை பரிமாறல்கள்..
எத்தனை சண்டைகள்
அத்தனையும் இனிமையாய்
மனதில்
உனக்கென நான்
காத்திருந்தது
என்னை காக்க வைக்கவே
நீ தாமதமாக
வருவது
இன்றும் பசுமையான
நினைவுகள் அது
நாம் பிரியா வரம்
வேண்டும் என்றோம்
அன்று
இன்றும் இதையே வரமாக
கேட்போம் என்று
அறியாமல்..
ஆயிரம் உண்டு
நம்மிடையே மோதல்
இருந்தும் இருந்திடதான்
செய்கிறது நம்
நட்பில் ஒரு காதல்
குறையாமல் கிடைத்திடும்
உன் அன்பினை
சிந்தாமல் சேர்த்திடுவேன்
என் உயிரினில்
என் பிரியமான தோழியே
Subscribe to:
Post Comments (Atom)
We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDelete