Sunday, June 6, 2010

காதலின் வலி

உன்னிடத்தில் சொல்ல நினைத்து
உன்னருகே வரும் நான்
சொல்லாமலே போகிறேன்
நிஜத்திலும் உன் நினைவிலும்

நித்திரை தொலைத்து
கவிகள் வடித்திட தோன்றும்
வார்தைகளின்றி தவிப்பது
யாருக்கு தெரியும்...

தொலைந்தன கவிதைகள்
தொடர்கின்றன உன் நினைவுகள்

"ஒரு" தலையாகவே நேசிக்கும் நான்
உன்னிடத்தில் ஒன்றாகவே இருக்கிறேன்
"இரு" தலையாக மாறினால் ஏனோ
இடைவெளி தெரிகிறது
வார்தையில்கூட தனித்து வாழ
நினைக்க முடிவதில்லையே
சொல்லாமலே எப்படி வாழ்வின்
உன் மனதிலும் வாழ்வின் வழியிலும்

என் பாதை நீயேயடி என்று நீ சொல்லும்
தருணத்தில் எந்தன் வாழ்வும்
நீயென்று என்னுயிரும் சொல்லுமடா
அதுவரை...நீயாகவே இருக்கும் உன்னை
நானாகவே இருந்து நேசிக்கிறேன்
காதலின் வலியோடு விழியின் நீரோடு

No comments:

Post a Comment