Thursday, May 6, 2010

அக நட்பு .....


தொடங்கிய இடத்தை தேடியே
தொடரும் நாட்களை
தொலைக்கிறேன்
இன்றும் புலப்படவில்லை
என்று உன்னிடம்
முதன் முதலாய்
நட்புக்கொண்டேன் என்று

அழகான புன்னகையுடன்
தொடங்கிய நம் நட்பு
இன்றும் புன்னகையுடனே
தொடர்கிறது..

ஆயிரம் சோகங்கள்
கொண்டாலும்
அன்பான உன் குரல்
அத்தனையும் தொலைத்து
விடும்
ஆனந்தத்தை மட்டுமே
விட்டுச்செல்லும்

என்னை நீ அறிந்தும்
உன்னை நான் அறிந்தும்
முகம் அறியா
நம் நட்பு..
முகவரியுடன் தொடரும் ...

No comments:

Post a Comment