Wednesday, May 12, 2010

என்னில் வழியும் கண்ணீர்துளிகள்
விரலைப் பிடித்து அழுதுக்கொண்டே
போகமாட்டேன் என மணலில்
விழுந்து புரண்ட என் முதல்
வகுப்பறையை
நினைவுப்படுதிச்செல்லும்

என்னிடத்தில் நட்பு கொள்ளும்
ஒவ்வொருவரும்
கரம் பற்றி அழைத்துச்சென்ற
முதல் தோழியை கண்ணின்
எதிரே கொண்டு வந்து
செல்கின்றனர்

எழுதும் ஒவ்வொரு
வார்த்தைகளும்
"அம்மா" என்று எழுதிய
முதல் வார்த்தையை
நினைக்க தூண்டும்

ஆயிரம் கவிகள் வரைந்தாலும்
"என் தந்தை " என்று எழுதிய
முதல் கவிதைக்கு ஈடாகுவதில்லை
இன்றும்

இசை என்றதும் நினைவில்
ஊஞ்சலாடுவது
தினமும் உற்சாகப் படுத்திய
"வீணை"
ஆசையுடன் பயின்ற
"நாட்டியம்"

என்றுமே என் நினைவில்
நீங்காத அந்த உணர்வுகளை
இன்றும் மறந்திட மனமில்லை

என் நினைவிலும் நிஜத்திலும்
பயணித்துக்கொண்டே இருக்கின்றன
அந்த அழகிய நாட்கள் !!!!!

No comments:

Post a Comment